புண்ணிய விளக்கம்
அறுசீர்க் கழிநெடிலடி
ஆசிரிய விருத்தம்
இராமலிங்கம் அடிகள்
திருச்சிற்றம்பலம்
பாடற்க இனிய வாக்களிக்கும்
பாலும் சோறும் பரிந்தளிக்கும்
கூடற்கு இனிய அடியவர்தம்
கூட்டம் அளிக்கும் குணம் அளிகும்
ஆடற்கு இனிய நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
தேடற்கு இனிய சீர் அளிக்கும்
சிவாய நமஎன்று இடுநீறே.
கருமால் அகற்றும் பிறப்பதனைக்
களையும் நெறியும் காட்டுவிக்கும்
பெருமால் அதனால் மயக்குகின்ற
பேதை மடவார் நசையறுக்கும்
அருமால் உழந்த நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
திருமால் அயனும் தொழுது ஏத்தும்
சிவாய நம என்று இடுநீறே.
வெய்ய வினையின் வேர் அறுக்கும்
மெய்மை ஞான வீட்டில் அடைந்து
உய்ய அமல நெறிகாட்டும்
உன்னற்கு அரிய உணர்வு அளிக்கும்
ஜயம் அடைந்த நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
செய்ய மலர்க்கண் மால்போற்றும்
சிவாய நம என்று இடுநீறே.
கோல மலர்த்தாள் துணை வழுத்தும்
குலத்தொண்டு அடையக் கூட்டுவிக்கும்
நீல மணிகண் டப்பெருமான்
நிலையை அறிவித்து அருள் அளிக்கும்
ஆல வினையால் நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
சீலம் அளிக்கும் திருவளிக்கும்
சிவாய நம என்று இடுநீறே.
வஞ்சப் புலக்காடு எறியஅருள்
வாளும் அளிக்கும் மகிழ்வளிக்கும்
கஞ்சத் தவனும் கரியவனும்
காணற்கு அரிய கழல் அளிக்கும்
அஞ்சிற் புகுந்த நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
செற்சொற் புலவர் புகழ்ந்தேத்தும்
சிவாய நம என்று இடுநீறே.
கண்கொள் மணியை முக்கனியைக்
கரும்பைக் கரும்பின கட்டிதனை
விண்கொள் அமுதை நம்மரசை
விடைமேல் நமக்குத் தோற்றுவக்கும்
அண்கொள் வினையால் நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
திண்கொள் முனிவர் சுரர்புகழும்
சிவாய நம என்று இடுநீறே.
நோயை அறுக்கும் பெருமருந்தை
நோக்கற் கரிய நுண்மைதனைத்
தூய விடைமேல் வரும் நமது
சொந்தத் துணையைத் தோற்றுவிக்கும்
ஆய வினையால் நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
சேய அயன்மால் நாடரிதாம்
சிவாய நம என்று இடுநீறே.
எண்ண இனிய இன்னமுதை
இன்பக் கருணைப் பெருங்கடலை
உண்ண முடியாச் செழுந்தேனை
அண்ண வினையால் நெஞ்சே நீ
அண்ண வினையால் நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
திண்ணம் அளிக்கும் திறம் அளிக்கும்
சிவாய நம என்று இடுநீறே.
சிந்தா மணியை நாம்பலநாள்
தேடி எடுத்த செல்வமதை
இந்தார் வேணி முடிக்கனியை
இன்றே விடைமேல் வரச்செய்யும் காண்
அந்தோ வினையால் நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
செந்தா மரையோன் தொழுது ஏத்தும்
சிவாய நம என்று இடுநீறே.
உள்ளத் தெழுந்த மகிழ்வை நமக்கு
உற்ற துணையை உள்ளுறவைக்
கொள்ளக் கிடையா மாணிக்கக்
கொழுந்தை விடைமேற் கூட்டுவிக்கும்
அள்ளல் துயரால் நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
தௌ;ளல் கடலான் புகழ்ந்து ஏத்தும்
சிவாய நம என்று இடுநீறே.
ஊற்ற இடத்தில் உதவ நமக்கு
உடையோர் வைத்த வைப்பதனைக்
கற்ற மனத்திற் புகும் கரனைக்
கனியை விடைமேல் காட்டுவிக்கும்
அற்றம் அடைந்த நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
செற்றம் அகற்றித் திறல் அளிக்கும்
சிவாய நம என்று இடுநீறே.
திருச்சிற்றம்பலம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக