பக்கங்கள்

சனி, 14 ஜனவரி, 2017

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருக்கேதாரத் தேவாரப் பதிகம்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருக்கேதாரத் 

தேவாரப் பதிகம்

பண் - நட்டபாடை

7 ஆம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

வாழ்வாவது மாயம்மிது மண்ணாவது திண்ணம்

பாழ் போவது விறவிக்கடல் பசிநோய் செய்த பறிதான்

தாழாதறஞ் செய்மின்தடங் கண்ணான்மல ரோனும்

கீழ் மேலுற நின்றான் திருக் கேதார மெனீரே.



பறியேசுமந் துழல் வீர்பறி நரிகீறுவதறியீர்

குறிகூவிய கூற்றங்கொளும் நாளால் அறம் உளவே

அறிவானிலும் அறிவான்றல நறுநீரொடு சோறு

கிறிபேசி நின்றிடுவார் தொழு கேதார மெனீரே.

கொம்மைப்பிடித் தொருக்காலர்கள் இருக்கால் மலர்தூவி 

நம்மன் நமை யாழ்வானென்று நடுநாளையும் பகலும்

கம்பக்களிற் றினமாய் நின்று சுனைநீர்களைத் தூவிச்

செம்பொற் பொடிச் சிந்துந்திருக் கேதார மெனீரே.





ஊழக்கேயுண்டு படைத்து ஈட்டிவைத்திழப் பார்களுஞ் சிலர்கள்

வழக்ககே யெனிற் பிழைக்கே மென்பர் மதிமாந்திய மாந்தர்

சழக்கே பறி நிறைப்பாரொடு தவமாவது செய்மின்

கிழக்கேசல மிடுவார் தொழு கேதார மெனீரே.



வாளோடிய தடங்கண்ணியர் வலையிலழுந்தாதே

நாளோடிய நமனார்தமர் நணுகாமுனம் நணுகி

ஆளாயுய்ம்மின் அடிகட்கிட மதுவேயெனி லிதுவே

கீளோடர வசைத்தானிடங் கேதார மெனீரே.





தளிசாலைகள் தவமாவது தம்மைப் பெறிலன்றே

குளியீருளங் குருக்கேத்திரங் கோதாவரி குமரி

தெளியீருளஞ் சீர்பர்ப்பதங் தெற்குவடக்காகக்

கிளிவாழையொண் கனிகீறியுண் கேதார மெனீரே.



பண்ணின் தமிழிசை பாடலின் பழவேய் முழுவதிரக்

கண்ணின்னொளி கனகச்சுனை வயிரம்மவை சொரிய

மண்ணின்றன மதவேழங்கள் மணிவாரிக்கொண்டறியக்

கிண்ணென்றிசை முரலுந்திருக் கேதார மெனீரே.



முளைக்கைப்பிடி முகமன் சொலி முதுவேய்களையிறுத்துத்

துளைக்கைக்களிற் றினமாய் நின்று சுனைநீர்களைத் தூவி

வளைக்கப் பொழி மழை கூர்தர மயில் மான்பினை நிலத்தைக்

கிளைக்கமணி சிந்துந் திருக் கேதார மெனீரே.



பொதியேசுமந் துழல்வீர் பொதி அவமாவதும் அறியீர்

மதிமாந்திய வழியே சென்று குழிவீழ்வதும் வினையால்

கதிசூழ் கடல் இலங்கைக்கிறை மலங்கவரை யடர்த்துக்

கெதிபேறு செய் திருத்தானிடங் கேதார மெனீரே.



நாவின்மிசை அரையன்னொடு தமிழ் ஞானசம்பந்தன்

யாவர்சிவ னடியார்களுக் கடியானடித் தொண்டன்

தேவன்திருக் கேதாரத்தை ஊரான் உரைசெய்த

பாவின் தமிழ் வல்லார் பரலோகத் திருப்பாரே.



திருச்சிற்றம்பலம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக