ஓம் சக்தி
மகாகவி சுப்பிரமணியப் பாரதியார்
நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப் பூண்
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம், இவள்
பார்வைக்கு நேர்பெருந்தீ
வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தரெல்லாம்,
தஞ்சமென் றேயுரைப்பீர் அவள் பேர், சக்தி
ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்.
நல்லதுந் தீயதுஞ் செய்திடும் சக்தி
நலத்தை நமக்கிழைப்பாள்
அல்லது நீங்கும் என்றேயுல கேழும்
அறைந்திடு வாய் முரசே!
சொல்லத் தகுந்த பொருளன்று காண்! இங்குச்
சொல்லு மவர்தமையே,
அல்லல் கெடுத்தம ரர்க்கிணை யாக்கிடும்
ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்.
நம்புவ தேவழி யென்ற மறைதன்னை
நாமின்று நம்பிவிட்டோம்
கும்பிட்டெந் நேரமும் 'சக்தி' யென் றாலுனைக்
கும்பிடு வேன்மனமே!
அம்புக்கும் தீக்கும் விடத்திற்கும் நோவுக்கும்
அச்சமில் லாதபடி
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம்
ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்.
பொன்னைப் பொழிந்திடு, மின்னை வளர்த்திடு
போற்றி உனக்கிசைத்தோம்
அன்னை பராசக்தி என்றுரைத்தோம்: தளை
அத்தனையும் களைத்தோம்:
சொன்ன படிக்கு நடந்திடு வாய், மன
மே தொழில் வேறில்லை, காண்
இன்னும் தேயுரைப் போம். சக்தி, ஓம் சக்தி
ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்.
வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு
ளாக விளங்கிடுவாய்!
தௌ;ளு கலைத்தமிழ் வாணி! நினக்கொரு
விண்ணப்பஞ் செய்திடுவேண்:
எள்ளத் தனைப்பொழுதும் பயனின்றி
இரா தென்றன் நாதவினிலே
வெள்ள மெனப்பொழி வாய்சக்தி வேல் சக்தி
வேல், சக்தி வேல், சக்தி வேல்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக