பக்கங்கள்

சனி, 28 ஜனவரி, 2017

ஒரு இளமலரின் இறுத்திப்பயணம்..

ஒரு இளமலரின் இறுத்திப்பயணம்..


ஆறில் சாகலாம் - அறியாத வயது, அறுபதில் சாகலாம் - அனுபவித்த வயது,

பதினாறில்சாவது கொடுமை, இப்படி ஒருவழக்கு தமிழில் உண்டு.


அந்தக்கொடுமை அமரர் சிவகௌரிக்கு நேர்ந்துவிட்து.


முதற்பிள்ளையை முத்தமிடும் கனவுடன் அவள் கருச்சுமந்த வேளையில்


அவளின் கனவுகளை மட்டுமல்ல அவளின் உயிரையும் காலன்


பறித்தெடுத்த கொடுமை நிகழ்ந்தேறிவிட்டது.


நோயால் அவள் பட்டவேதனையை உணர்ந்து நாம் துடித்தோம்.


அவளின் பிரிவால் நாம்படும் வேதனையை உணர அவள் இன்று உயிருடன் இல்லை.


இதயங்களால் தாங்க முடியாத வலிஅவளின் பிரிவு.


ஆனால் தாங்கித்தான் ஆகவேண்டும்.


அவளின் உயிர் பிரியும் அந்தக்கணத்தை அவளின் வயிற்றில் வளரும் சிசுவுக்காக


ஒத்திவைத்த மருத்துவர்கள் பெரும் போரையே நடத்தினார்கள்.


ஆனால் -


அப்போரில் 59ம் நாள் காலன் வென்றுவிட்டான்.


நெஞ்சங்களில் குருதிவழிய திரும்பி வர முடியாத தொலைவுக்குப் போய்விட்டாள்.


புற்று நோயால்; இறப்பவர் கோடிக்கு ஒருவர் என்ற நிலைபோய்


இலட்சத்துக்கு ஒருவராகி ஆயிரத்துக்கு ஒருவராக பெருகிவிட்டது.


புகைத்தல் புற்று நோய்க்கு காரணமாகலாம் என கண்ட இடமெல்லாம் விளம்பரங்கள்.


புகைப்பிடிப்பவர்கள் அருகில் கூட நின்றறியாள்.


மாமிச உணவைக்கூட நினைத்துப்பார்த்ததில்லை. மரக்கறி உணவை உண்டு வளர்ந்தவள்.


நாம் உண்ணும் அரிசியிலிருந்து மரக்கறி வரை நஞ்சூட்டப்படுகிறது.


இரசாயன பசளைகளும் கிருமி கொல்லிகளும் பயிர்களை நோய்வழங்கிகளாக மாற்றிவிட்டன.


எங்கள் உடல்களோ நோய்கள் குடியேறி கொலைக்கூத்தாடும் கூடாரங்கள் ஆகிவிட்டன.


யமக்கிரர்கள் பாசக்கயிறு கொண்டு உயிர்களை பறிக்கும் காலம் மலையேறிப் போக


பெரும் பசளை கிருமி உற்பத்தி நிறுவனங்கள் லாபக் கயிறு கொண்டு


எங்கள் உயிர்களை பறிக்கின்றன.


எங்கள் உயிர்கள் நோய்களுக்கு விருந்தாகி விடுகின்றன.


எல்லோரும் அறிந்த கொடுமைதான் இது.


மாற்று வழிமுறைகள் இருந்த போதும், மாற்று வழிகளை நாட உரியவர்களால் முடியவில்லை.


பெரும் தொழில் நிறுவனங்கள் முன் எல்லோரும் பகடைக்காய்கள் தான்.


இத்தகைய கொடுமையில்தான் மணம் வீசி மனம் நிறைய வேண்டிய


கௌரி இதழ் உதிர்ந்து சருகாகிவிட்டாள்.


அவள் நாளும் பொழுதும் நஞ்சுண்ட கண்டனை வழிபடும் பக்தை.


சிவனின் நஞ்சை பார்வதியார் தொண்டையுடன் தடுத்துவிட்டார்.


இவளில் மெல்லமெல்ல பரவிய நோயை அந்த நஞ்சுண்ட கண்டனே தடுக்கவில்லை.


தாங்க முடியாத துயரை எமக்குத்தந்துவிட்டு,


விலைமதிக்க முடியாத உயிரை கொண்டு போய்விட்டான்.


அவள் இறைவனை நம்பினாள். அவள் மீண்டு வருவாள் என நாம் நம்பினோம்.


இன்று அவள் நம்பிய இறைவனிடமே போய் சேந்துவிட்டாள்.


அவளின் குழந்தையின் வடிவில் அவளை கண்டு மனம் ஆறுவதைத்தவிர வேறு வழியில்லை


அவளின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கிறேன்.


திரு.நா.யோகேந்திரநாதன்.


(மூத்த ஊடகவியலாளர்)




புதன், 25 ஜனவரி, 2017

ஓம் சக்தி மகாகவி சுப்பிரமணியப் பாரதியார்

ஓம் சக்தி

மகாகவி சுப்பிரமணியப் பாரதியார்

நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்

நிறைந்த சுடர்மணிப் பூண்

பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம், இவள்

பார்வைக்கு நேர்பெருந்தீ

வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி

வையக மாந்தரெல்லாம்,

தஞ்சமென் றேயுரைப்பீர் அவள் பேர், சக்தி

ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்.



நல்லதுந் தீயதுஞ் செய்திடும் சக்தி

நலத்தை நமக்கிழைப்பாள்

அல்லது நீங்கும் என்றேயுல கேழும்

அறைந்திடு வாய் முரசே!

சொல்லத் தகுந்த பொருளன்று காண்! இங்குச்

சொல்லு மவர்தமையே,

அல்லல் கெடுத்தம ரர்க்கிணை யாக்கிடும்

ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்.



நம்புவ தேவழி யென்ற மறைதன்னை

நாமின்று நம்பிவிட்டோம்

கும்பிட்டெந் நேரமும் 'சக்தி' யென் றாலுனைக்

கும்பிடு வேன்மனமே!

அம்புக்கும் தீக்கும் விடத்திற்கும் நோவுக்கும்

அச்சமில் லாதபடி

உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம்

ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்.



பொன்னைப் பொழிந்திடு, மின்னை வளர்த்திடு

போற்றி உனக்கிசைத்தோம்

அன்னை பராசக்தி என்றுரைத்தோம்: தளை

அத்தனையும் களைத்தோம்:

சொன்ன படிக்கு நடந்திடு வாய், மன

மே தொழில் வேறில்லை, காண்

இன்னும் தேயுரைப் போம். சக்தி, ஓம் சக்தி

ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்.



வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு

ளாக விளங்கிடுவாய்!

தௌ;ளு கலைத்தமிழ் வாணி! நினக்கொரு

விண்ணப்பஞ் செய்திடுவேண்:

எள்ளத் தனைப்பொழுதும் பயனின்றி 

இரா தென்றன் நாதவினிலே

வெள்ள மெனப்பொழி வாய்சக்தி வேல் சக்தி

வேல், சக்தி வேல், சக்தி வேல்!


புண்ணிய விளக்கம்

புண்ணிய விளக்கம்
அறுசீர்க் கழிநெடிலடி 
ஆசிரிய விருத்தம்
இராமலிங்கம் அடிகள்
திருச்சிற்றம்பலம்
பாடற்க இனிய வாக்களிக்கும்
பாலும் சோறும் பரிந்தளிக்கும்
கூடற்கு இனிய அடியவர்தம்
கூட்டம் அளிக்கும் குணம் அளிகும்
ஆடற்கு இனிய நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
தேடற்கு இனிய சீர் அளிக்கும்
சிவாய நமஎன்று இடுநீறே.

கருமால் அகற்றும் பிறப்பதனைக்
களையும் நெறியும் காட்டுவிக்கும்
பெருமால் அதனால் மயக்குகின்ற
பேதை மடவார் நசையறுக்கும்
அருமால் உழந்த நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
திருமால் அயனும் தொழுது ஏத்தும்
சிவாய நம என்று இடுநீறே.

வெய்ய வினையின் வேர் அறுக்கும்
மெய்மை ஞான வீட்டில் அடைந்து
உய்ய அமல நெறிகாட்டும் 
உன்னற்கு அரிய உணர்வு அளிக்கும்
ஜயம் அடைந்த நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
செய்ய மலர்க்கண் மால்போற்றும்
சிவாய நம என்று இடுநீறே.

கோல மலர்த்தாள் துணை வழுத்தும்
குலத்தொண்டு அடையக் கூட்டுவிக்கும்
நீல மணிகண் டப்பெருமான்
நிலையை அறிவித்து அருள் அளிக்கும்
ஆல வினையால் நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
சீலம் அளிக்கும் திருவளிக்கும்
சிவாய நம என்று இடுநீறே.

வஞ்சப் புலக்காடு எறியஅருள் 
வாளும் அளிக்கும் மகிழ்வளிக்கும்
கஞ்சத் தவனும் கரியவனும் 
காணற்கு அரிய கழல் அளிக்கும்
அஞ்சிற் புகுந்த நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
செற்சொற் புலவர் புகழ்ந்தேத்தும்
சிவாய நம என்று இடுநீறே.



கண்கொள் மணியை முக்கனியைக் 
கரும்பைக் கரும்பின கட்டிதனை
விண்கொள் அமுதை நம்மரசை
விடைமேல் நமக்குத் தோற்றுவக்கும்
அண்கொள் வினையால் நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
திண்கொள் முனிவர் சுரர்புகழும்
சிவாய நம என்று இடுநீறே.

நோயை அறுக்கும் பெருமருந்தை
நோக்கற் கரிய நுண்மைதனைத்
தூய விடைமேல் வரும் நமது
சொந்தத் துணையைத் தோற்றுவிக்கும்
ஆய வினையால் நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
சேய அயன்மால் நாடரிதாம்
சிவாய நம என்று இடுநீறே.

எண்ண இனிய இன்னமுதை
இன்பக் கருணைப் பெருங்கடலை
உண்ண முடியாச் செழுந்தேனை
அண்ண வினையால் நெஞ்சே நீ
அண்ண வினையால் நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
திண்ணம் அளிக்கும் திறம் அளிக்கும்
சிவாய நம என்று இடுநீறே.

சிந்தா மணியை நாம்பலநாள்
தேடி எடுத்த செல்வமதை
இந்தார் வேணி முடிக்கனியை
இன்றே விடைமேல் வரச்செய்யும் காண்
அந்தோ வினையால் நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
செந்தா மரையோன் தொழுது ஏத்தும்
சிவாய நம என்று இடுநீறே.


உள்ளத் தெழுந்த மகிழ்வை நமக்கு
உற்ற துணையை உள்ளுறவைக்
கொள்ளக் கிடையா மாணிக்கக்
கொழுந்தை விடைமேற் கூட்டுவிக்கும்
அள்ளல் துயரால் நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
தௌ;ளல் கடலான் புகழ்ந்து ஏத்தும்
சிவாய நம என்று இடுநீறே.


ஊற்ற இடத்தில் உதவ நமக்கு
உடையோர் வைத்த வைப்பதனைக்
கற்ற மனத்திற் புகும் கரனைக்
கனியை விடைமேல் காட்டுவிக்கும்
அற்றம் அடைந்த நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
செற்றம் அகற்றித் திறல் அளிக்கும்
சிவாய நம என்று இடுநீறே.

திருச்சிற்றம்பலம்.

திருக்கேதீஸ்வரம்

திருக்கேதீஸ்வரம்

பண் : நட்டராகம

விருதுன்றா மேருவினாணர வாவனலெரியம்பாப்

பொருதுமூவேயில் செற்றவன் பற்றிநின் றுறைபதி பெந்நாளும்

கருகின்றவூர் கனைகடற்கடிகமழ் பொழிலணி மாதோட்டம்

கருதநின்றகே தீச்சரங்கை கைதொழக் கடுவினையடையாவே



பாடல்வீணையர் பலபலசரிதைய ரெருகைத் தருநட்டம்

ஆடல்பேணுவ ரமரர்கள் வேண்டநஞ சுண்டிருள் கண்டத்தார்

ஈடமாவது விருக்கடற்கரையினி லெழிற்கழ் மாதோட்டங்

கேடிலாதகே தீச்சரந்தெழக் கெடுமிடர் வினை தானே



பெண்ணொர்பாகத்தர் பிறைதவழ்சடையின் ரறைகழல் சிலம்பார்க்கச்

சுண்ணமாதரித் தாடுவர்பாடுக ரகந்தொறு மிடுபிச்சைக்

குண்ணலாவதோ ரிச்சையினுழல்பவ ருயர்தரு மாதோட்டத்

தண்ணன்ணுகே தீச்சரமடைபவர்க் கருவினை யடையாவே



பொடிகொண்மேனியர் புலிதளரையினர் விரிதருகரத்தோறும்

வடிகொண்மூவிலை வேலினர் நூலினர் மறிகடன் மாதோட்டத்

தடிகளாதரித்திருந்த திருக்கேதீச்சரம் பரிந்த சிந்தையராகி

முடிகள் சாய்த்தடி பேணவல்லார்தம்மேன் மொய்தெழும் வினைபோமே



நல்லராற்றவு ஈனநன்குடையர் தம்மடைத்தவர்க் கருளிய

வல்லர்பார்மிசை வான்பிறப்பிறப்பிலர் மலிகடன் மாதோட்டத்

தெல்லையில்புக ழெந்தைகேதீச்சர மிராப்பகநினைந்தேத்தி

அல்லலாசறுத் தரனடியினை தொழு மரன்பரா மடியாரே.



பேழைவார்சடைப் பெருந்திருமகடனைப் பொருத்த வைத்தொருபாகம்

மாழையற்கயற் கண்ணிபாலருளிய பொருளினர் குடிவாழ்க்கை

வாழையம்பொழின் மந்திகள் களிப்புற மருவிய மாதோட்டங்

கேழல்வெண்மருப் பணிந்த நீண்மார்பர்கே தீச்சரம்பிரியாரே.





பண்டுநால்வருக் கறமுலைத்த தருளிப்பல் லுலகினி லுயிர்வாழ்க்கை

கண்டநாதனார் கடலிடங்கைத்தொழக் காதலித்துறைகோயில்

வண்டுபண்செயு மாமலர்ப்பொழின் மஞ்ஞை நடமிடுமாதோட்டம்

தொண்டர் நாடொறுந் துதிசெயவருள்செய் கேதீச்சரத்தானே



தென்னிலங்கையர் குலபதிமலை நலிந்தெடுத்தவன் முடிதிண்டோ

டன்னலங்கெட வடர்த்தவற் கருள்செய்த தலைவனார்கடல்வாயப்

பொன்னிலங்கிய முத்துமாமணிகளும் பொருந்தியமாதோட்டத்

துன்னியன்பொடு மடியவரிறைஞ்சுகே தீச்சரத்துள்ளாரே.



பூவுளானும் பொருகடல் வண்ணனும் புவியிடந்தெழுந்தோடி

மேவிநாடின் னடியினை காண்கிலா வித்தக மென்னாகும்

மாவும் பூகமும் கதலியுநெருங்குமா தோட்ட நன்னகர்மன்னித்

தேவி தன்னொடுந் திருந்துகேதீச்சரத் திருந்த வெம்பெருமானே.



புத்தராய்ச்சில புனைதுகிலுடையவர் புறனுரைச் சமணாதர்

எந்தராகிநின் றுண்பவரியம்பிய வேழைமை கேளேன்மின்

மத்தயானையை மறுகிடவுரிசெய்து போர்த்தவர் மாதோட்டத்

தத்தர்மன்னுபா லாவியின் கரையிற்கே தீச்சரமடைமின்னே.



மாடெலாமண முரசெனக் கடலின தொலிகவர் மாதோட்டத்

தாடலேறுடை யண்ணல்கேதீச்சரத் தடிகளை யணிகாழி

நாடுகளார்க்கின்ற ஞானசம்பந்தன்சொன் னவின்றெழுபாமாலைப்

பாடலாயின பாடுமின்பத்தர்கள் பரகதிபெறலாமே.



திருச்சிற்றம்பலம்


சனி, 21 ஜனவரி, 2017

லிங்காஷ்டகம்



பிரம்ம முராரி ஸூரார்சித லிங்கம்

நிர்மல பாஷூர சோபித லிங்கம்

ஜன்மஜதுக்க விநாசக லிங்கம்

தத்பிரணமாமி ஜதாசிவ லிங்கம்


தேவ முனிப்பிரவார்ச்சித லிங்கம்

காம தஹம் கருணாகர லிங்கம்

ராவண தர்ப்ப விநாசன லிங்கம்

தத்பிரணமாமி ஸதாசிவ லிங்கம்


ஸர்வஸூகந்தி ஸூலேபித லிங்கம்

புத்தி விவர்த்தன் காரண லிங்கம்

ஸித்த ஸூராஸூர வந்தித லிங்கம்

தத்பிரணமாமி ஸதாசிவ லிங்கம்



குங்கும சந்தண லேபித லிங்கம்

பங்கஜ ஹார ஸூசோபித லிங்கம்

ஸஞ்சித பாப விநாசன லிங்கம்

தத்பிரணமாமி ஸதாசிவ லிங்கம்


தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்

பாவன பக்தி ப்ரவேச லிங்கம்

தினகர கோடி ப்ரபாகர லிங்கம்

தத்பிரணமாமி ஸதாசிவ லிங்கம்


அஸ்டதளோபரி வேஷ்டித ஸேவித லிங்கம்

ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்

அஸ்டதரித்திர விநாசித லிங்கம்

தத்பிரணமாமி ஸதாசிவ லிங்கம்


ஸூரகுரு ஸூர்வர பூஜித லிங்கம்

ஸரவண புஸ்ப ஸதாசிவ லிங்கம்

பராத்பரம் பரமாத்மக லிங்கம்

தத்பிரணமாமி ஸதாசிவ லிங்கம்


நோன்புக் கயிற்றின் இருபத்தொரு முடிச்சுக்களுக்கும் உரிய பூஜை

நோன்புக் கயிற்றின் இருபத்தொரு முடிச்சுக்களுக்கும் உரிய பூஜை

ஓம் சிவாய சிவாய நம

ஓம் சாந்தாய சாந்தாய நம

ஓம் மகாதேவாய மகாதேவ்வியை நம

ஓம் விருஷத்துவஜாய விருஷபத்துவ ஜாயாயை நம

ஓம் கௌPசாய கௌர்யை நம

ஓம் ருத்தியாய ருத்திராண்யை நம

ஓம் பசுபதயே பசுபதயாயை நம

ஓம் பீமாயபீமாயை நம

ஓம் திரியம்பகாய திரியம்பகியை நம

ஓம் நீலலோகிதாய நீலலோகிதாயை நம

ஓம் ஹராய ஹராயை நம

ஓம் ஸ்மரகராய ஸ்மகராயை நம

ஓம் பிரார்க்கர்ய பிரார்க்காயை நம

ஓம் சம்பவே சாம்பவ்வியை நம

ஓம் சர்வாய சர்வாண்ணியை நம

ஓம் சதாசிவாய சதாவாயை நம

ஓம் ஈஸ்வராய ஈஸ்வர்யை நம

ஓம் உக்கிராய உக்கிராண்ணியை நம

ஓம் ஸ்ரீ கண்டாய சுகபோலாயை நம

ஓம் நீலகண்டாய கம்புகண்டியை நம

ஓம் மிருத்தியஞ் ஜயாயகாத்தியாஜின்னியை நம


சிவத்தியான ஸ்தோத்திரம்



சிவத்தியான ஸ்தோத்திரம்
தியாயேத் நித்தியம் மகேசம ரஜதகிரிநிபம்

சாரு கந்திரா வதம்சம்

ரத்தினா கல்போச் ஜீவலாங்கம் பரசுமிருகவரா

பீதிகஸ்தகம் பிரசன்னம்

பத்மாசனஸ்தம் சசாம்பம் ஸ்துத அமரகணேகிர்

வியாக்கிற கிறுத்திம் வசானம் அமரகணேகிர்

விஸ்வாத்தியம் விஸவ்வந்தியம் நிகிலபயகரம்

பஞ்சவக்திறம் திறிநேத்திரம்



ஸ்ரீ சிவாஷ்டோத்தர சத – நாமாவளி



ஓம் சிவாய நம ஓம் உத்ராய நம

ஓம் மஹேசவராய நம      ஓம் காபலினே நம

ஓம் சம்வவே நம ஓம் காமாரயே நம

ஓம் பிநாகினே நம ஓம் அந்தகாஸூரஸூதனாய நம

ஓம் சசிசேகராய நம ஓம் கங்காதாரய நம

ஓம் வாமதேவாய நம ஓம் லலாடாஷாய நம

ஓம் விரூபஷhய நம ஓம் காலகாலாய நம

ஓம் கபர்த்தினே நம ஓம் க்ருபாநிதய நம

ஓம் நீலலோஹிதாய நம ஓம் பீமாய நம

ஓம் சங்கராய நம ஓம் பரசுஹஸ்தாய நம

ஓம் சூலபாணயே நம ஓம் மருகபாணயே நம

ஓம் கட்வாங்கினே நம ஓம் ஜடாதராய நம

ஓம் விஷ்ணுவல்லபாய நம ஓம் கைலாஸவாஸினே நம

ஓம் சிபிவிஷ்டாய நம ஓம் கவசினே நம

ஓம் அம்பிகாநாதாய நம ஓம் கடோராய நம

ஓம் ஸ்ரீ கண்டாய நம ஓம் த்ரிபுராந்தகாய நம

ஓம் பக்தவத்ஸலாய நம ஓம் வ்ருஷாங்காய நம

ஓம் பவாய நம ஓம் பஸ்மோத்தூலித-

ஓம் சர்வாய நம விக்ர ஹாய நம

ஓம் த்ரிலோகேசாய நம ஓம் ஸாமப்ப்ரியாய நம

ஓம் சிதிகண்டாய நம ஓம் ஸ்வர மயாய நம

ஓம் சிவப்பிரியாய நம ஓம் திரயிமூர்த்தயே நம

ஓம் அநீச்வராய நம ஓம் ருத்ராய நம

ஓம் ஸர்வஜ்ஞாய நம ஓம் பூதபதயே நம

ஓம் பரமாத்மனே நம ஓம் ஸ்தாணவே நம

ஓம் ஸோமஸுர்யாக்னிலோசனாய நம

ஓம் அஹயேபுத்னயாய நம

ஓம் ஹவிஷே நம ஓம் திகம்பராய நம

ஓம் யஜ்ஞமயாய நம ஓம் அஷ்டமூர்த்தயே நம

ஓம் ஸோமாய நம ஓம் அநோகாத்மனே நம

ஓம் பஞ்சபத்திராய நம ஓம் ஸாத்விகாய நம

ஓம் ஸதாசிவாய நம ஓம் சுத்தவிக்ரஹாய நம

ஓம் விஸ்வேஸ்வராய நம ஓம் சாஸ்வதாய நம

ஓம் வீரபத்ராய நம ஓம் கண்டபரசவே நம

ஓம் கணநாதாய நம ஓம் அஜயாய நம

ஓம் ப்ரஜாபதயே நம ஓம் பாபவிமோசநாய நம

ஓம் கிரண்ய ரேதசே நம ஓம் மிருடாய நம

ஓம் துர்த்தர்ஷாய நம ஓம் பசுபதயே நம

ஓம் கிரீசாய நம ஓம் தேவாய நம

ஓம் கிரிசாய நம ஓம் மஹாதேவாய நம

ஓம் அனகாய நம ஓம் அவ்வியயாய நம

ஓம் புஜங்கபூஷ்ணாய நம ஓம் ஹராய நம

ஓம் பர்க்காய நம ஓம் பூஷதந்தபிதே நம

ஓம் கிரிதன்வனே நம ஓம் அவ்யய நம

ஓம் கிரிப்ரியாய நம ஓம் ஹராய நம

ஓம் க்ருத்திவாஸஸே நம ஓம் பகநேத்ரபிதே நம

ஓம் புராராதயே நம ஓம் அவ்யக்தாய நம

ஓம் பகவதே நம ஓம் தஷாத் வரகராய நம

ஓம் ப்ரமதாதிபாய நம ஓம் ஸஹஸ்ராஷாய நம

ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம ஓம் ஸஹஸ்ரபதே நம

ஓம் ஸுஷமதனவே நம ஓம் அபவர்க்கப்ரதாய நம

ஓம் ஜகத்வ்யாபினே நம ஓம் அனந்தாய நம

ஓம் ஜகத்குரவே நம ஓம் தாரகாய நம

ஓம் வ்யோகேசாய நம ஓம் பரமெஸ்வராய நம

ஓம் மஹாஸேனஜனகாய நம

ஓம் சாருவிக்ரமாய நம


சனி, 14 ஜனவரி, 2017

சிவலிங்க தியான அர்ச்சனை மாலை




கேதார கௌரி விரதம் அனுட்டிக்கும் தினங்கள்

கேதார கௌரி விரதம் அனுட்டிக்கும் தினங்கள்


ஆலய நிர்வாகம் ஆற்றவேண்டிய பணிகள்

ஆலய நிர்வாகம் ஆற்றவேண்டிய பணிகள்
1. நித்திய, நைமித்திய பூசைகள், அலங்காரத் திருவிழாக்கள் போன்றவற்றைத் தகைமை வாய்ந்த பூசகர்கள் சிவாச்சாரியார்கள் மூலம் நடாத்துதல்.
2. வருடம் முழுதும் நித்திய பூசைகளைத் தினமும் நேரம் தவறாது குறிப்பிட்ட நேரத்தில் சைவாகம விதிப்படி நடாத்த ஒழுங்குகள் செய்தல்.
3. கோவில் திருப்பணி வேலைகளை உரிய காலத்தில் செய்து அதற்குரிய சடங்குகளையும் செய்தல்.
4. மூலமூர்த்திகளின் சந்நிதிகளை எப்பொழுதும் உள்ளும் புறமும் பரிசுத்தமாக இருக்கும் பொருட்டு கண்காணித்தல்.
5. சுவாமி எழுந்தருளும் தேர், சப்பறம், சகடை வாகனங்கள் போன்றவற்றை உரிய காலத்தில் திருத்திப் புதுப்பித்து அவை பழுதுறா வண்ணம் பாதுகாப்பான இடத்தில் வைத்தல்
6. கோவிலுக்கு வேண்டிய பொருட்கள் உபகரணங்களைக் குறைவின்றி சேமித்து வைத்தல்
7. காகம், புறா, குரங்கு, எலி, அணில் போன்றவற்றால் அசுத்தமும் சேதமும் ஏற்படாவண்ணம் பாதுகாத்தல்
8. கோவில் பூசகர், அர்ச்சகர், ஊழியர், காவலர் போன்றோரின் ஊதியங்களை உரிய காலங்களில் தவறாது கொடுத்தல்
9. கோவிலுக்குரிய நிதி, பொருள் போன்றவற்றை நேர்மையாகவும் நீதியாகவும் கையாண்டு அதற்கு எதுவித பங்கமும் ஏற்படாவண்ணம் பார்த்துக் கொள்ளல்
10. கோவில் திருவிழா போன்ற விசேஷ காலங்களில் சிற்றின்ப உணர்ச்சிகளை ஊட்டக் கூடிய கேளிக்கைகளைத் தவிர்த்து பேரின்பப் பெருவாழ்வுக்கு வழிகாட்டக் கூடிய நிகழ்ச்சிகளை நடாத்துதல்
11. கூட்டுப் பிரார்த்தனை, பஜனை போன்றவற்றை உரிய நேரகாலத்தில் நடாத்துதல்
12. கோவிலில் பக்தி நெறியூட்டும் பாடல்களை மட்டும் ஒலி பரப்புதல்
13. மது போதையிலும் மாமிசபோசனம் உண்டவுடனும் தலைவிரி கோலத்துடனும் கோவிலினுள் புகுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளுதல்
14. ஆசாரமில்லாமலும் வாயில் வெற்றிலை பாக்கு, புகைத்தலுடனும் பாதணி சட்டை அணிந்து கொண்டும் கோவிலுள் புகாவண்ணம் தவிர்த்துக் கொள்ளுதல்
15. தொற்று வியாதியஸ்தர், ஆசௌசம் உடையோர்களை உட்புகாவண்ணம் தடுத்தல்.
16. சுகல பக்தர்களும் சுவாமி தரிசனம் பெறும் பொருட்டு ஆண், பெண் இரு பாலாரும் இரு பக்கங்களிலும் நின்று தரிசனம் செய்ய ஒழுங்கு செய்தல்.
17. ஒருவர் மீது ஒருவர் இடித்துக் கொண்டும் தள்ளிக் கொண்டும் போகா வண்ணம் பார்த்துக் கொள்ளல்
18. இறைவன் புகழ் பாடுதலின்றி வீண்வார்த்தை பேசாதிருக்கச் செய்தல்
19. கோவில் பூசகரால் பக்தர்களுக்கு கொடுக்கப்படும் வீபூதி, சந்தனம், குங்குமம், பத்திர புஸ்பங்கள் போன்ற பிரசாதங்களின் மிகுதியை பவுத்திரப்படுத்தும் முறையில் பாத்திரங்கள் அமைதல்
20. அசுத்தங்களைப் போடுவதற்கு ஏற்ற முறையில் ஆங்காங்கு குப்பைத் தொட்டிகளை அமைத்தல்
21. கோவிலுக்குள் பக்தர்கள் கால்களைக் கழுவி ஆசமனஞ் செய்யும் பொருட்டு நீர் நிலைகளை அமைத்தல்
22. கோவிலின் புறப்பகுதியில் மலசலகூடங்களை அமைத்தல்
23. மகேசுவரர் பூசை அன்னதானம் போன்றவற்றை நடாத்துவதற்கு ஏற்ற முறையில் திருமடங்களை அமைத்தல்

கேதாரீஸ்வரர் பூஜாவிதி

கேதாரீஸ்வரர் பூஜாவிதி
பூஜாரம்பத்தில் மஞ்சளால் விநாயகரைச் செய்வித்து கந்தம், புஸ்பம், அறுகு சாத்தி நோன்பு நோற்பவர்கள் கையில் புஷ்பம் கொடுத்து விநதயகரை அர்ச்சனை செய்விக்க வேண்டும். அதற்குரிய மந்திரங்களாவன.
ஓம் சுமுகாய நம         ஓம் தூமகேதுவ நம
ஓம் ஏகதந்தாய நம ஓம் கணதயஷாய நம
ஓம் கபிலாய நம  ஓம் பாலசந்திராய நம
ஓம் கஜகர்ணகாய நம ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் லம்போதராய நம ஓம் சூர்ப்பகர்ணாய நம
ஓம் விகடாய நம ஓம் ஹேரம்பாய நம
ஓம் விக்நராஜாய நம ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம
ஓம் விநாயகாய நம ஓம் மகாமணாதிபதயே நம
எனும் சோடச நாமங்களை ஓதி நாணாவித புஸ்பமிட்டு தூபம் ஆக்கிராபயாமி, தீபம் தர்சயாமி என்று சொல்லி தூப தீபம் காண்பித்து தட்சணை, தாம்பூலம், நைவேத்தியம் வைத்து தீபாராதனையான பிறகு ஸ்ரீ கேதாரீஸ்வரரை ஆவாகணஞ் செய்ய வேண்டும். அதாவது அம்மியையும் குளவியையும் அலங்கரித்து அம்மியின் மேல் குளவியை நிறுத்தி குங்குமம், கந்தம் முதலிய பரிமள திரவியங்களை அணிவித்து பருத்தி மாலையிட்டு, புஸ்பம் சாத்தி அதனெதிரில் கலசம் நிறுத்தி அதற்கும் பருத்தி மாலையிட்டு, புஸ்பம் சாத்தி நோன்பு விரதம் அனுஷ்டிப்பவரை அங்கே அமரச் செய்து கேதாரீஸ்வரரை மனதிலே தியானஞ் செய்து கொள்ளச் சொல்லி காசி, கங்கா தீர்த்த திருமஞ்சனமாட்டியது போலும் பட்டு பீதாம்பரம் ஆபரணாதிகளால் அலங்கரித்தது போலும் மனதில் சங்கல்பஞ் செய்து கொள்ளச் சொல்லி வில்வம், தும்பை, கொன்றை ஆகிய மலர்களால் ஈஸ்வரரைக் கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி அர்ச்சனை செய்விக்க வேண்டும்.
ஓம் சிவாய நம ஓம் மானந்திராய நம
ஓம் கேசவாய நம ஓம் சிவாய நம
ஓம் ருத்ராய நம ஓம் சதாசிவாய நம
ஓம் சங்கராய நம ஓம் அச்சுதாய நம
ஓம் நீலகண்டாய நம ஓம் நிர்மலயா நம
ஓம் நாரயணாய நம ஓம் அரூபாய நம
ஓம் கிருஷ்ணாய நம ஓம் ஆனந்தரூபாய நம
ஓம் பத்மநாபாய நம ஓம் கோவிந்தாய நம
ஓம் கங்காதராய நம ஓம் சூலபாணயே நம
ஓம் கைலாசவாசாய நம ஓம் ஈசாந்யாய நம
ஓம் திரிசூலாய நம ஓம் சிவபூஜாய நம
ஓம் மடுவேந்திராய நம ஓம் காலகண்டாய நம
ஓம் கபாலமூர்த்தியே நம ஓம் தாமோதராய நம
ஓம் பரமகுருவே நம ஓம் பார்வதிபிரானேசாய நம
ஓம் சாந்தருத்ராய நம ஓம் சற்குருவாய நம
ஓம் மார்கண்டாய நம ஓம் நந்திகேஸ்வராய நம
ஓம் திரிபுரதஹனாய நம ஓம் கேதாரீஸ்வராய நம
என்று அர்ச்சனை செய்வித்து அவர்கள் கையில் புஸ்பம் அஷதை கொடுத்து மும்முறை பிரதர்ஷணம் செய்வித்து கையில் உள்ள புஷ்ப அஷதையை சுவாமியின் மேல் போடச் செய்து தூப தீபங் காட்டி நைவேத்தியம், தாம்பூலம் சமர்ப்பித்து கற்பூர தீபாராதனை காண்பித்து அவர்களுக்கு நோன்புக் கயிறும் புஷ்பமும் அஷதையும் சிரசின் மேல் போட்டுக் கொண்டு நோன்புக் கயிற்றைக் கட்டிக் கொள்ள வேண்டும்.

ஆலய வழிபாடு
திருக்கோயில்
இறைவன் அங்கு இங்கு எனாதபடி எங்கும் நிறைந்திருக்கின்றார். கன்று ஈன்ற பசுவின் பால் உடல் முழுவதிலும் பரந்திருப்பினும் அதன் முலையிலிருந்து மட்டும் பால் சுரப்பது போல் எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்திருப்பினும் திருக்கோவில்களில் ஆன்மாக்களாக்கிய எமக்கு அருள்புரியும் பொருட்டு விளங்கித் தோன்றி அருள் சுரக்கின்றார்.

கோவிலுக்குச் செல்லும் முறை
அதிகாலையில் எழுந்து பரிசுத்தமான நீர் நிலையில் நீராடி தோய்த்துலர்ந்த ஆடைகளை உடுத்திக் கொண்டு சமய தீட்சை பெற்றவராயின் திரிபுண்டரமாகவும் ஏனையோர் உத்தூளனமாகவும் வீபூதியைத் தரித்துக் கொண்டு தேங்காய், பழம், பாக்கு, வெற்றிலை, குங்குமம், சந்தனம், வீபூதி, ஊதுபத்தி, சூடம், பூ, மாலை போன்ற அர்ச்சனைப் பொருட்களைச் சுத்தமான பாத்திரத்தில் வைத்து எடுத்துக் கொண்டு உலக நிகழ்ச்சிகளில் மனதைச் செலுத்தாது நாம் வழிபடும் தெய்வத்தின் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டும் பன்னிரு திருமுறைகளை மனதில் பாராயணம் செய்து கொண்டும் செல்லல் வேண்டும். திருக்கோயிலை அண்மித்ததும் அங்குள்ள திருக்குளத்திலோ, கிணற்றிலோ கைகால்களைக் கழுவி ஆசமனஞ் செய்து தூலலிங்கமாகிய திருக்கோபுரத்தைத் தரிசித்து இரண்டு கைகளையுஞ் சிரசிலே குவித்துச் சிவநாமங்களை உச்சரித்து கொண்டு உள்ளே போதல் வேண்டும்.

வழிபடும் முறை
பலிபீடத்திற்கு இப்பால் வீழ்ந்து வணங்குதல் வேண்டும். கிழக்கு மேற்கு நோக்கிய சந்நிதானங்களில் வடக்கே தலை வைத்து வணங்குதல் வேண்டும். வடக்கு தெற்கு நோக்கிய சந்நிதானங்களில் கிழக்கே தலை வைத்து வணங்குதல் வேண்டும். கிழக்கிலும் வடக்கிலும் கால் நீட்டி வணங்குதல் கூடாது. ஆடவர்கள் அஸ்டாங்க நமஸ்காரம் செய்தல் வேண்டும். அட்டாங்க நமஸ்காரம் என்பது தலை, கையிரண்டு, புயங்கள் இரண்டு, மேவாய், செவியிரண்டு என்னும் எட்டவயமும் நிலத்திலே பொருந்தும்படி பூமியிலே சிரசை வைத்து மார்பு பூமியிலே படும்படி வலக்கையை முன்னும் இடக்கையை பின்னும் நேரே நீட்டி பின் அம்முறையை மடக்கி வலப்புயமும் இடப்புயமும் நிலத்திலே பொருந்தும்படி கைகளை அரையை நோக்கி நீட்டி வலக்காதை முன்னும் இடக்காதை பின்னும் நிலத்திலே பொருந்தச் செய்து வணங்குதல் வேண்டும். பெண்கள் பஞ்சாங்க வணக்கம் செய்தல் வேண்டும். பஞ்சாங்க வணக்கமாவது தலை, கையிரண்டு, முழங்கால் இரண்டு என்னும் ஐந்து அவயமும் நிலத்திலே பொருந்தும் படி வணங்குதல் ஆகும். இவ்வாறு பலிபீடத்திற்கு முன் அபிஷேக நிவேதன சமயம் அல்லாத நேரத்தில் வணக்கம் செய்த பிறகு திருக்கோயில் வீதியை வலம் வருதல் வேண்டும்.
இரண்டு கைகளையும் சிரசிலேனும் மார்பிலேனும் குவித்து சிவநாமங்களை உச்சரித்துக் கொண்டு கால்களை மெல்ல வைத்து மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது முறை வீதியை வலம் வருதல் வேண்டும். முதன் முதலில் விநாயகரை வணங்குதல் வேண்டும். அப்போது கை விரல்களை மடித்து முட்டியாக பிடித்துக் கொண்டு இரண்டு கைகளினாலும் நெற்றியிலே மூன்று முறை குட்டி வலக்காதை இடக்கையினாலும் இடக்காதை வலக்கையினாலும் பிடித்துக் கொண்டு குதிக்கால்களில் பின்பகுதி முட்டும் வரை மூன்று முறை தாழ்ந்தெழுந்து கும்பிடல் வேண்டும். விநாயகரை தரிசனம் செய்த பின் நந்தியெம்பெருமானையும் துவார பாலகரையும் வணங்கி அனுமதி பெற்று உள்ளே செல்ல வேண்டும். மூலமூர்த்தியாகிய சிவனைத் தரிசனம் செய்த பின் பரிவார மூர்த்திகளாகிய தட்சனாமூர்த்தி, சோமஸ்கந்தர், சந்திரசேகர், புவனேஸ்வரி, வேணுகோபாலர், மகாலக்சுமி, கண்ணகி, ஆறுமுகக் கடவுள், வைரவர், வீரபத்திரர், நவக்கிரக நாயகர்கள், நாகதம்பிரான் போன்ற ஏனைய திருவுருவங்களை தரிசனம் செய்தபின் இறுதியாக சண்டேசுவரர் சந்நிதியை அடைந்து அப்பெருமான் சதா நிஷ்டையில் இருப்பதால் மூன்று முறை கை தட்டிப் பிரார்த்தனைப் பலனைத் தரும் பொருட்டு வணங்குதல் வேண்டும். உடையில் உள்ள நூல்களைப்; பிடுங்கி அர்ப்பணம் செய்தல் கூடாது. மூலமூர்த்திக்கும் சண்டேஸ்வரருக்கும் குறுக்கால் செல்லல் கூடாது. இவர் மூலமூர்த்தி ஆண் தெய்வமானால் சண்டேஸ்வரர் என்றும் பெண் தெய்வமானால் சண்டேஸ்ரி என்றும் அழைக்கப்படுவர்.
தமிழ் வேதமாகிய பஞ்ச புராணத்தை ஓதும் போது அடக்க ஒடுக்கமாக நின்று முதலில் திருச்சிற்றம்பலம் எனக் கூறிப் பின் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம், வாழ்த்து ஆகிய மனங்கசிந்துருக கண்ணீர் மல்க, உரோமம் சிலிர்ப்ப, பண்ணிசையோடு பேணுதல் வேண்டும். வீட்டிலிருந்து கொண்டு சென்ற அர்ச்சனைப் பொருட்களை பூசகரிடம் கொடுத்து இஷ்ட தெய்வத்திற்கு அர்ச்சித்ததும் கோவில் பூசகரால் கொடுக்கப்படும் பிரசாதங்களை அடக்கமாக நின்று இரண்டு கைகளையும் நீட்டி வலக்கையை மேலும் இடக்கையை கீழும் வைத்து வீபூதியை வாங்கி வடக்கு முகமாகவோ கிழக்கு முகமாகவோ நின்று அண்ணாந்து கொண்டு சிவ சிவ என்று உச்சரித்தபடி மூன்று விரல்களால் வீபூதியை நெற்றியின் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் வரையும் துலக்கமாக பூசுதல் வேண்டும். ஒரு இரு விரல்களால் பூசுதல் ஆகாது. மிகுதியான விபூதியை நிலத்தில் சிந்தாமல் அதை பவுத்திரப்படுத்தி வைத்திருத்தல் வேண்டும். சந்தனம், குங்குமத்தை நெற்றியில் இட்ட பின் மிகுதியை கோவில் தூண், சுவர், மதில் போன்றவற்றில் பூசுதல் கூடாது. பத்திர புஷ்பங்களை நிலத்தில் சிந்துதல், அவற்றை காலால் மிதித்தல் மகாபாவச் செயலாகும். அதன்பின் தரும் தீர்த்தம் பஞ்சாமிர்தம் என்பவற்றை அருமருந்தாக அமிர்தமாக உண்டபின் வாய் கைகளைச் சுத்தம் செய்த பின் பலிபீடத்தடிக்கு வந்து மீண்டும் கீழே விழுந்து வணங்கி அங்கு நின்று சுவாமி தரிசனம் செய்து உத்தரவு பெற்றுக் கொண்டு அதிலிருந்து அகன்று ஒரு புறம் போக்கான இடத்திலிருந்து கொண்டு பஞ்சாட்சரத்தை இயன்றளவு ஓதுதல் வேண்டும். இல்லற மேம்பாட்டிற்காக நகராதி பஞ்சாட்சரமாகிய நமசிவாய எனும் ஐந்தெழுத்தைச் செபமாலை மணிகளைக் கீழ் நோக்கித் தள்ளிய வண்ணம் செபிக்க வேண்டும். துறவற மேம்பாட்டிற்காக முத்தியின்பம் பெறும் பொருட்டு சிகராதி பஞ்சாடசரமாகிய சிவாயநம என்னும் சிவமூல மந்திரத்தை செபமாலை மணிகளை மேல் நோக்கி நகர்த்தியவாறு செபிக்க வேண்டும். இறுதியாக அர்ச்சனைப் பொருட்களுடன் திருக்கோவிலிலிருந்து வெளியேறி மீண்டும் தூலலிங்கமாகிய கோபுரத்தைத் தரிசித்துக் கொண்டு தெய்வ சிந்தனையுடன் வீடேகுதல் வேண்டும். கோவிலிலிருந்து பெறப்பட்ட பாதித் தேங்காய்களை மாமிச உணவு தயாரிப்பதற்கு பயன்படுத்தலாகாது. 

திருத்தொண்டுகள்
கூட்டுதல், கழுவுதல், பத்திரபுஷ்பம் கொடுத்தல், திருமாலை கட்டுதல், சுகந்ததீபம் இடுதல், திருவிளக்கேற்றுதல், பூசைத் திரவியங்கள் எடுத்தல், தீவர்த்து, குடை, கொடி, ஆலவட்டம் பிடித்தல், சாமரம் வீசுதல், சுவாமியைத் தாங்கி வீதி வலம் வருதல், சுவாமியின் பின் பக்கமாகச் சென்று இசையுடன் கூட்டுப் பிரார்த்தனை செய்தல், திருவீதியில் உள்ள புல் பூண்டுகளைச் செருக்குதல், திருக்கோபுரத்திலும் மதில் சுவர்களிலும் ஏனைய கட்டடங்களிலும் உண்டாகும் ஆல், அரசு, வேம்பு முதலியவற்றை வேரோடு களைதல், நந்தவனம் அமைத்தல், திருக்கோவில், திருக்குளம், திருவீதி போன்றவற்றை எல்சில், மலசலம் முதலியவற்றினால் அசுத்தமடையா வண்ணம் பாதுகாத்தல்

குறிப்பு :-



கேதாரகௌரி விரதத்தை அனுட்டிக்கும் பெண்களுக்குத் தோரணக்காப்புக் கட்டும் தினத்தில் மாதவிடாய் ஏற்பட்டால் தோரணக் காப்பை சுவாமியறை போன்ற புனிதமான இடத்தில் வைத்து அடுத்த அமாவாசைத் தினத்தில் அணியலாம் 


சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருக்கேதாரத் தேவாரப் பதிகம்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருக்கேதாரத் 

தேவாரப் பதிகம்

பண் - நட்டபாடை

7 ஆம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

வாழ்வாவது மாயம்மிது மண்ணாவது திண்ணம்

பாழ் போவது விறவிக்கடல் பசிநோய் செய்த பறிதான்

தாழாதறஞ் செய்மின்தடங் கண்ணான்மல ரோனும்

கீழ் மேலுற நின்றான் திருக் கேதார மெனீரே.



பறியேசுமந் துழல் வீர்பறி நரிகீறுவதறியீர்

குறிகூவிய கூற்றங்கொளும் நாளால் அறம் உளவே

அறிவானிலும் அறிவான்றல நறுநீரொடு சோறு

கிறிபேசி நின்றிடுவார் தொழு கேதார மெனீரே.

கொம்மைப்பிடித் தொருக்காலர்கள் இருக்கால் மலர்தூவி 

நம்மன் நமை யாழ்வானென்று நடுநாளையும் பகலும்

கம்பக்களிற் றினமாய் நின்று சுனைநீர்களைத் தூவிச்

செம்பொற் பொடிச் சிந்துந்திருக் கேதார மெனீரே.





ஊழக்கேயுண்டு படைத்து ஈட்டிவைத்திழப் பார்களுஞ் சிலர்கள்

வழக்ககே யெனிற் பிழைக்கே மென்பர் மதிமாந்திய மாந்தர்

சழக்கே பறி நிறைப்பாரொடு தவமாவது செய்மின்

கிழக்கேசல மிடுவார் தொழு கேதார மெனீரே.



வாளோடிய தடங்கண்ணியர் வலையிலழுந்தாதே

நாளோடிய நமனார்தமர் நணுகாமுனம் நணுகி

ஆளாயுய்ம்மின் அடிகட்கிட மதுவேயெனி லிதுவே

கீளோடர வசைத்தானிடங் கேதார மெனீரே.





தளிசாலைகள் தவமாவது தம்மைப் பெறிலன்றே

குளியீருளங் குருக்கேத்திரங் கோதாவரி குமரி

தெளியீருளஞ் சீர்பர்ப்பதங் தெற்குவடக்காகக்

கிளிவாழையொண் கனிகீறியுண் கேதார மெனீரே.



பண்ணின் தமிழிசை பாடலின் பழவேய் முழுவதிரக்

கண்ணின்னொளி கனகச்சுனை வயிரம்மவை சொரிய

மண்ணின்றன மதவேழங்கள் மணிவாரிக்கொண்டறியக்

கிண்ணென்றிசை முரலுந்திருக் கேதார மெனீரே.



முளைக்கைப்பிடி முகமன் சொலி முதுவேய்களையிறுத்துத்

துளைக்கைக்களிற் றினமாய் நின்று சுனைநீர்களைத் தூவி

வளைக்கப் பொழி மழை கூர்தர மயில் மான்பினை நிலத்தைக்

கிளைக்கமணி சிந்துந் திருக் கேதார மெனீரே.



பொதியேசுமந் துழல்வீர் பொதி அவமாவதும் அறியீர்

மதிமாந்திய வழியே சென்று குழிவீழ்வதும் வினையால்

கதிசூழ் கடல் இலங்கைக்கிறை மலங்கவரை யடர்த்துக்

கெதிபேறு செய் திருத்தானிடங் கேதார மெனீரே.



நாவின்மிசை அரையன்னொடு தமிழ் ஞானசம்பந்தன்

யாவர்சிவ னடியார்களுக் கடியானடித் தொண்டன்

தேவன்திருக் கேதாரத்தை ஊரான் உரைசெய்த

பாவின் தமிழ் வல்லார் பரலோகத் திருப்பாரே.



திருச்சிற்றம்பலம்


சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருக்கேதாரத் தேவாரப் பதிகம்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருக்கேதாரத் 

தேவாரப் பதிகம்

பண் - நட்டபாடை

7 ஆம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

வாழ்வாவது மாயம்மிது மண்ணாவது திண்ணம்

பாழ் போவது விறவிக்கடல் பசிநோய் செய்த பறிதான்

தாழாதறஞ் செய்மின்தடங் கண்ணான்மல ரோனும்

கீழ் மேலுற நின்றான் திருக் கேதார மெனீரே.



பறியேசுமந் துழல் வீர்பறி நரிகீறுவதறியீர்

குறிகூவிய கூற்றங்கொளும் நாளால் அறம் உளவே

அறிவானிலும் அறிவான்றல நறுநீரொடு சோறு

கிறிபேசி நின்றிடுவார் தொழு கேதார மெனீரே.

கொம்மைப்பிடித் தொருக்காலர்கள் இருக்கால் மலர்தூவி 

நம்மன் நமை யாழ்வானென்று நடுநாளையும் பகலும்

கம்பக்களிற் றினமாய் நின்று சுனைநீர்களைத் தூவிச்

செம்பொற் பொடிச் சிந்துந்திருக் கேதார மெனீரே.





ஊழக்கேயுண்டு படைத்து ஈட்டிவைத்திழப் பார்களுஞ் சிலர்கள்

வழக்ககே யெனிற் பிழைக்கே மென்பர் மதிமாந்திய மாந்தர்

சழக்கே பறி நிறைப்பாரொடு தவமாவது செய்மின்

கிழக்கேசல மிடுவார் தொழு கேதார மெனீரே.



வாளோடிய தடங்கண்ணியர் வலையிலழுந்தாதே

நாளோடிய நமனார்தமர் நணுகாமுனம் நணுகி

ஆளாயுய்ம்மின் அடிகட்கிட மதுவேயெனி லிதுவே

கீளோடர வசைத்தானிடங் கேதார மெனீரே.





தளிசாலைகள் தவமாவது தம்மைப் பெறிலன்றே

குளியீருளங் குருக்கேத்திரங் கோதாவரி குமரி

தெளியீருளஞ் சீர்பர்ப்பதங் தெற்குவடக்காகக்

கிளிவாழையொண் கனிகீறியுண் கேதார மெனீரே.



பண்ணின் தமிழிசை பாடலின் பழவேய் முழுவதிரக்

கண்ணின்னொளி கனகச்சுனை வயிரம்மவை சொரிய

மண்ணின்றன மதவேழங்கள் மணிவாரிக்கொண்டறியக்

கிண்ணென்றிசை முரலுந்திருக் கேதார மெனீரே.



முளைக்கைப்பிடி முகமன் சொலி முதுவேய்களையிறுத்துத்

துளைக்கைக்களிற் றினமாய் நின்று சுனைநீர்களைத் தூவி

வளைக்கப் பொழி மழை கூர்தர மயில் மான்பினை நிலத்தைக்

கிளைக்கமணி சிந்துந் திருக் கேதார மெனீரே.



பொதியேசுமந் துழல்வீர் பொதி அவமாவதும் அறியீர்

மதிமாந்திய வழியே சென்று குழிவீழ்வதும் வினையால்

கதிசூழ் கடல் இலங்கைக்கிறை மலங்கவரை யடர்த்துக்

கெதிபேறு செய் திருத்தானிடங் கேதார மெனீரே.



நாவின்மிசை அரையன்னொடு தமிழ் ஞானசம்பந்தன்

யாவர்சிவ னடியார்களுக் கடியானடித் தொண்டன்

தேவன்திருக் கேதாரத்தை ஊரான் உரைசெய்த

பாவின் தமிழ் வல்லார் பரலோகத் திருப்பாரே.



திருச்சிற்றம்பலம்