பக்கங்கள்

சனி, 5 மார்ச், 2016

கௌரிப்பா மாலை

கௌரிப்பா மாலை
பிள்ளையார் காப்பு

முன்னின்று செய்யுள் முறையாய்ப் புனைந்ததற்கு

என்னின்று அருள் ஆலடி விநாயகனே

சொற்குற்ற மொடு பொருட் குற்றம் சோர்வு தரும்

எக்குற்றமும் வராமற் கா.


                                                                  கௌரி காப்பு




 காரனைய கூந்தல் கவுரியியற்றிய
கேதார விரதத்தை யான் படிக்க சீரிலகும்
ஐந்து கரத் தந்தி முகத்தண்ணலடி யார்க்கருளுங்
கந்தமலர் செஞ்சரனே காப்பு. 



காப்பெடுக்க வந்தேனே கௌரி அம்பாள் தாயே

காத்து என்னை தேற்றிடுவாய் காளிமகா தேவியரே

காலமெல்லாம் நின் அரிய காப்பெடுத்தே வாழ்ந்திடுவேன்

எண்ணும் கருமம் இனிதாய் முடித்திடுவாய்

பண்ணும் வினையாவும் பனிபோல போக்கிடுவாய்

உண்ணும் உணவாக உயிருக்கு உயிராக

என்றும் இருந்தே எனைக்காத்து வந்திடுவாய்

காடும் கடந்து வந்தேன் மலையும் கடந்து வந்தேன்

காளி மகா தேவியரே காப்பெனக்கு தந்திடுவாய்

சூலம் கைக் கொண்டவளே சுந்தர முகத்தவளே

அரியை உடையவளே அம்மா காளித்தாயே

கொடிய மகிடாசூரனைக் கூறு போட்டவளே

அசுரர் குணம் யாவும் அளிக்கும் சுடர்க் கொடியே

சிவனை நினைத்தெல்லோ சீர்விரதம் நீ இருந்தாய்

பரனை நினைத்தெல்லோ பதி விரதம் நீ இருந்தாய்

அரனை நினைத்தெல்லோ அம்மா நீ நோன்பிருந்தாய்

சங்கரனை எண்ணியல்லோ சங்கரி நீ நோன்பிருந்தாய்

ஐங்கரனைப் பெற்றவளே அன்று நீ நோன்பிருந்தாய்

விரதத்தை கண்டே விழித்தான் சிவனவனும்

அம்மா உனை அழைத்தே அருள் மாரி பொழிந்தானே

வகையாற்றுப் படலமிதை வழிவழியாய் காட்டிடுவீர்

நெறியறியாத் திகைப்போர்க்கு நெறிமுறையைக் காட்டிவிடு

காப்பைப் புனைந்துவிடு காலபயம் ஓட்டிவிடு

நூலைப் புனைந்துவிடு நுண்ணறிவை ஊட்டிவிடு

வல்லமையைத் தந்துவிடு வையகத்தில் வாழவிடு

காளிமகா தேவியரே காப்பருளும் தேவியரே

காப்பைப் புனைபவளே காப்பாய் இருப்பவளே

நாடு செழிக்கவென்றே விழைகாப்பு அருளுமம்மா

நல்வாழ்வு வாழ்வதற்கு நற்காப்பு அருளுமம்மா

அல்லல் அறுப்பதற்கு அருட்காப்பு அருளுமம்மா

பிள்ளை அற்றவர்க்கு பெருங்காப்பு அருளுமம்மா

பூமணியே மாமணியே புனிதவதி தாயவளே

நாம் விரும்பும் காப்பை நலமுடனே தாருமம்மா

கல்வி சிறப்பதற்கு கலைமகளே வாருமம்மா

செல்வம் சிறப்பதற்கு திருமகளே வாருமம்மா

வீரம் சிறப்பதற்கு வீரசக்தி தாருமம்மா

பாட்டுடைத் தலைவியரே பராசக்தி தாயவளே

ஏட்டுடைத் தேவியரே எல்லாம் மிகு வல்லமையே

காப்பெடுக்க வந்தேனம்மா கனிவுடனே பாருமம்மா

பால் பழங்கள் வெற்றிலைகள் பல்வகைத் திரவியங்கள்

நானுனக்குத் தாறேனம்மா நயந்தென்னை காருமம்மா

காளி மகா தேவியரே காசினிக்கு வித்தவளே

வித்தை விதைப்பவளே வினை காக்கும் காப்பவளே

எத்தால் வாழ்ந்திடுவோம் எல்லாம் உனதருளே

காசினியில் வேற்றுமையைக் கணப்பொழுதில் மாற்றிவிட்டால்

ஏசலின்றி வாழ்ந்திடுவோம் ஏற்றுபுகழ் தாயாரே

காப்பெனக்கு போட்டுவிட்டால் கல்மனது இளகிவிடும்

ஞானம் மிகுந்து வரும் நல்வாழ்வு மிகுந்துவரும்

தொடர்ந்து அணிவோருக்கு தொட்டதெல்லாம் ஜெயமாகும்

இசைந்து அணிவோர்க்கு நினைத்ததெல்லாம் ஈடேறும்

நம்பி அணிவோருக்கு நல்லதெல்லாம் பெருகிவரும்

நாள்கள் கோள்களெல்லாம் நலமுடனே இணைந்து வரும்

சந்தணச் சாந்தவளே சங்கரியே சாந்தினியே

குங்குமப் பூச்சவளே குலக் கொழுந்தே கௌரியம்மா

காப்பினைக் கட்டிவிட்டு கடமை முடிந்ததென்று

ஏப்பம் மிக விட்டு என்றுமே இருந்தறியேன்

நாளும் பொழுதிலெல்லாம் நறுங்காப்பு கட்டதனில்

பூவும் நீருமிட்டு போற்றி வணங்கிடுவேன்

காலைப் பொழுதெழுந்து காப்பதனில் விழித்திடுவேன்

ஞானச் செழுஞ்சுடரே காளியுன்னைக் காணுகின்றேன்

காப்பெனக்கு கையிலுண்டு கடமைகளைச் செய்திடுவேன்

ஏய்ப்பவரைக் கண்டால் எரிமலை போல் கனன்றிடுவேன்

தீமைச் செயலெதுவும் தெரியாது செய்கையிலே

காப்புக் கையிலிருந்து கண் திறந்து காட்டுமடி

சொல்லற்கரிதான சோதிமிகு காப்பதனை 

இருபது நாள்வரையும் இசைவோடு விரதமிருந்து 

பக்தி மனதுடனே பரவி அணிவோர்க்கு 

சித்தியெல்லாம் தருவாள சீர்பெரு கௌரியவள்

முத்திக்கு வழியுமுண்டு முக்கால உணர்வுமுண்டு

எச்சகத்திலோர்களெல்லாம் ஏற்றியெமைப் போற்றிடுவர்

சொற்சக்தி பொருட்சக்தி துலங்கி வந்திடவே

அச்சக்தி எல்லாம் அருள்வாள் கௌரியவள்

கௌரி காப்பதனை காலம் தவறாமல்

முறையாய் அணிந்துவர முன்வினைகள் நீங்கிவர 

ஞானம் ஓங்கிவர நல்லறிவு துலங்கிவர

தேவிமகா காளியரே தெவிட்டாத தீங்கனியே

காளியாய் வந்தமர்ந்த கௌரியே காப்பருளும்.


திருக்கேதார நாதமும் கேதார விரதமும் திருக்கேதார மகிமை

திருக்கேதார நாதமும் கேதார விரதமும்

திருக்கேதார மகிமை


அறம்பொருள்கள் இன்பம் வீ(டு) அருள்நந்தி ஆரூரர்

ஆதியோர் மேவு கயிலை

யங்கிரிக்குத் தெற்கு இலக்கமே இருப்பதுடன்

ஐயாயிரம் படியெனும்

நிறைந்த மலை உண்(டு) அவையுள் முதல் மலை இ(து) ஆதலால்

நின்னைக் காவனில் வைத்து

நீள்மந்திர சிங்காசனத்(து) அம்புடன் மேவும்

நிருமலன் வெள்ளி வெற்பில்

பிறந்திறந் துழலாமல் ஆனந்த அமுதுண்டு

பெருவாழ்வு பெற்றிருக்கப்

பேராசை யுற்றோர் சரீரத்துடன் வரப்
பெரியவருள் முத்தி வாய்தல்

திறந்திருக் குஞ்சிவன் கேதாரம் வாழ் முருக

சிறுதேர் உருட்டியருளே

தேகம் விட்(டு) சந்நிதிக்கடிய னேன்வரச்

சிறு தேர் உருட்டியருளே.


விக்னேஸ்வரர் அர்ச்சனை

விக்னேஸ்வரர் அர்ச்சனை

தியானம்

மூஷிக வாகன மோதக ஹஸ்தா

சாமர கர்ண விலம்பித சூத்ர

வாமன ரூப மஹேந்திர புத்ரா

விக்ன விநாயக பாத நமஸ்தே

ஓம் சுமுகாய நம

ஓம் ஏகதந்தாய நம

ஓம் கபிலாய நம

ஓம் கஜகர்ணகாய நம

ஓம் லம்போதராய நம

ஓம் விகடாய நம

ஓம் விக்னராஜாய நம

ஓம் விநாயக நம

ஓம் தூமகேதவே நம

ஓம் கணாத்யஷயா நம

ஓம் பாலச்சந்திராய நம

ஓம் கஜானனாய நம

ஓம் வக்ரதுண்டாய நம

ஓம் சூர்ப கர்னாய நம

ஓம் ஹேரம்பாய நம

ஓம் ஸ்கந்தபூர்சஜாய நம


gowry amma